18

siruppiddy

நவம்பர் 22, 2022

யாழ் நல்லூரில் மாவீரர்களின் பெயர்கள் திரைநீக்க நிகழ்வு 21.11.22

 நல்லூரில் மாவீரர் வாரம் 21-11-2022.அன்றயதினம்   ஆரம்பமாகியுள்ள நிலையில், யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலாயத்திற்கு முன்பாக மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் மக்கள் அஞ்சலிக்காக அங்குரார்ப்பணம்
 செய்து வைக்கப்பட்டன.
இதன்போது 34 கல்வெட்டுக்கள் 17 மாவீரர்களின் பெற்றோரால் மாலை 6.30 மணியளவில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டதுடன் அவை எதிர்வரும் 27ஆம் திகதி வரையில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.
தியாக தீபம் திலீபனின் நினைவாலாயத்திற்கு முன்பாக உள்ள பகுதிகளில் யாழ் மாநகர சபையின் அனுமதிகளை பெற்று குறித்த கல்வெட்டுக்கள் வைக்கப்பட்டுள்ளன.
மாவீரரின் பெற்றோரால் ஈகைச் சுடரேற்றப்பட்டு கல்வெட்டுக்கள் ஒரே நேரத்தில் மாவீரர்களின் பெற்றோரால் திரைநீக்கம்
 செய்துவைக்கப்பட்டது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



மே 14, 2022

இலங்கை அரச தலைவர் முன்னிலையில் இன்று பதவியேற்கும் நான்கு அமைச்சர்கள்

நான்கு அமைச்சர்கள் இன்று அரச தலைவர் முன்னிலையில் பதவியேற்க உள்ளதாக அரசியல் வட்டாரங்கள்
 தெரிவிக்கின்றன.
இதன்படி, ஜி.எல்.பீரிஸ், பிரசன்ன ரணதுங்க, காஞ்சன விஜேசேகர மற்றும் தினேஷ் குணவர்தன ஆகியோர் பதவியேற்கவுள்ளதாக 
தெரிவிக்கப்படுகின்றது.
முன்னதாக ஜி.எல்.பீரிஸ் வெளிவிவகார அமைச்சராகவும் காஞ்சன விஜேசேகர மின்சக்தி எரிசக்தி அமைச்சராகவும் , தினேஷ் குணவர்தன கல்வி அமைச்சராகவும் , பிரசன்ன ரணதுங்க பொது பாதுகாப்பு 
அமைச்சராகவும் இருந்தனர்.
இந்நிலையில், தற்பொழுதும் அவர்களுக்கு அதே அம்மைச்சு பதவிகளே வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் 
கிடைக்கப்பெற்றுள்ளன.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>



ஜனவரி 25, 2022

கிளிநொச்சி புதிய கருவிகளுடன் வந்த தென்னிலங்கையர்கள் கைது

கிளிநொச்சி – இராமநாதபுரம் பகுதியில் புதையல் தோண்டும் முயற்சிக்காக இரண்டு வாகனங்களில் வந்த ஏழு பேர் கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் பொலிஸ் சோதனைச் சாவடியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை அவர்களிடம் இருந்து புதையல் தேடுவதற்குப் 
பயன்படுத்தப்படும் ஸ்கானர்
ஒன்றும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. மேலும் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் பொலிஸ் கான்ஷ்டபிள் என்று தெரியவந்துள்ளது. இராமநாதபுரம், சம்புக்குளம்
 பகுதியில் புதையல் அகழ்வதற்காக வந்ததாக விசாரணையின் போது தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இப்பகுதியில் புதையல் தோண்டும் முயற்சி தொடர்பில் பல்வேறு சந்தர்ப்பங்களில் கைதுகள் இடம்பெற்றிருந்தமை 
குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>



ஆகஸ்ட் 31, 2021

நாட்டில் சீனிக்கு ஏற்பட்டுள்ள பெரும் தட்டுப்பாடு நீண்ட வரிசையில் மக்கள்

இலங்கையில் சீனிக்கு ஏற்பட்டுள்ள பெரும் தட்டுப்பாடு காரணமாக மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.இந்நிலையில் சதொசயில் விற்பனை செய்யப்படும் சீனியை பெற்றுக்கொள்ள மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
அமைச்சர் லசந்த அழகியவண்ண வெளியிட்ட தகவலை அடுத்து சதொசயில் சீனியின் விலை சடுதியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதுவரையில் 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ சிவப்பு சீனி, தற்போது 130 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
அதற்கமைய நேற்றைய தினம் முதல் 10 ரூபாவினால் சீனியின் விலையை அதிகரிக்க சதொச நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. அத்துடன் ஒரு குடுபத்திற்கு ஒரு கிலோ சீனி மாத்திரமே விற்பனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதனை பெற்றுக் கொள்வதற்கு சதொச நிறுவனங்களுக்க முன்னால் நீண்ட வரிசையில் மக்கள் நிற்பதாக சில சதொச நிறுவனங்களில் சீனி நிறைவடைந்துள்ளமையினால் மக்களால் கொள்வனவு செய்ய முடியாமல் வீடு திரும்ப நேரிட்டுள்ளதாக தகவல்கள்
 வெளியாகியுள்ளன.
நிலாவரை.கொம் செய்திகள் >>>




மே 25, 2021

கடைகளை கிளிநொச்சியில் மூடிய சிறிலங்கா காவல் துறை

 

கிளிநொச்சி நகரில், 25-05-2021.இன்றைய தினம் திறக்கப்பட்ட வியாபார நிலையங்களில், அத்தியாவசிய வியாபார நிலையங்களை தவிர ஏனையவற்றை காவல் துறை  உடனடியாக 
மூடியுள்ளனர்.
இன்றைய தினம் அதிகாலை, பயண கட்டுப்பாடு தளர்த்தப்பட்ட நிலையில், கிளிநொச்சி நகரில் பெரும்பாலான வியாபார நிலையங்கள் திறக்கப்பட்டிருந்தன.
பொதுமக்களும் வழமை போன்று நகருக்கு வருகை தந்திருந்தனர். ஆனால், அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யும் வியாபார நிலையங்களைத் தவிர ஏனையவற்றை திறப்பதற்கு தடை விதிக்கப்பட்மைக்கு அமைவாக கிளிநொச்சியில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

நிலாவரை.கொம் செய்திகள் >>>

 


 

சர்வதேச அரங்கில் தமிழர்களின் உரிமை தொடர்பாக குரல் கொடுத்தால் அது பயங்கரவாதமாம்

 தமிழ் மக்களின் நீதி மறுப்பு, தமிழர்களின் உரிமை தொடர்பாக சர்வதேச அரங்கில் குரல் கொடுத்தால் அது பயங்கரவாதம், ஆனால் முதலீடு என்ற பெயரில் சர்வதேச நாடுகள் இலங்கையை 
துண்டாடுவது தேசியவாதம் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கை தமிழரசு கட்சியின் ஊடக செயலாளருமான பா.அரியநேத்திரன் 
தெரிவித்துள்ளார்.
அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேறிய துறைமுகங்கள் சட்டமூலம் தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் தற்போது சீனாவின் ஆதிக்கத்தில் கொடுக்கப்படவுள்ள துறைமுக அபிவிருத்தி என்பது இலங்கையின் ஆட்சியாளர்களுடைய விருப்பம் அதனை தமிழ் தேசிய கூட்டமைப்பினராகிய நாம் அப்படி சீனாவுக்கு வழங்குவது முறையான செயல் இல்லை என்பதால் அந்த சட்டமூலத்தை பகிரங்கமாக எதிர்த்தோம்.
இன்னொரு நாட்டினால் இலங்கைக்கு பாதிப்புகள் ஏற்படலாம் அது இப்போது புரியாது காலம் கடந்தபின் இலங்கை மக்கள் ஒட்டுமொத்தமாக இதனை எதிர்க்கும் காலம் உருவாகும்.
பொல்லை கொடுத்து அடி வாங்கும் நிலைக்கு இந்த செயல் மாறலாம். அப்போது இதனை ஆதரித்து வாக்களித்தவர்களும் இரட்டை வேடம் போட்ட கட்சி உறுப்பினர்களும் புரிந்து கொள்வார்கள்.
வடக்கு, கிழக்கு தமிழ் தேசிய அரசியல் பிரச்சினை இன்று சர்வதேச அரசியலுடன் கலந்துள்ளது. எமது ஒருமித்த நாட்டுக்குள் 
சுயநிர்ணய உரிமையுடன் வாழ வேண்டும் என்ற 
கோட்பாட்டு தத்துவத்துடன்
 இலங்கையை ஆட்சி செய்த சிங்கள தலைவர்களுடன் நடந்த பேச்சுக்கள் ஒப்பந்தங்கள் போராட்டங்கள் எல்லாம் மௌனிக்கபலபட்ட நிலையில் தேசிய ரீதியில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினை இன்று சர்வதேச அரங்கிற்கு சென்றுள்ளது.
சர்வதேசம் தலையிட வேண்டும் என தமிழ் தலைமைகள் சர்வதேசத்தை நோக்கி கேட்பது தவறு என கூறும் ஆட்சியாளர்கள் சர்வதேசத்திற்கு நாட்டில் ஒரு பகுதியை கையளிப்பது சரி என எந்த வகையில் நியாயம் 
கற்பிக்க முடியும்.
உங்களுக்கு அது பொருளாதார பிரச்சினை என்றால் எங்களுக்கு அது உரிமை பிரச்சனை என்பதை அனைவரும் புரிந்து
 கொள்ள வேண்டும்.
சிலர் கேட்கலாம் தமிழ் தேசிய கூட்டமைப்பு சர்வதேசத்தை நோக்கி தமது அரசியல் செயல்பாடுகளை முன் எடுக்கும் போது ஒரு சர்வதேச நாடான சீனாவுக்கு இலங்கை அரசு தமது ஆட்சிக்கு உட்பட்ட ஒரு பகுதியை கையளிப்பதை ஏன் எதிர்க்க வேண்டும்.
எமது உரிமை பிரச்சினை என்பது சீனாவுடன் சம்பந்தப்பட்ட விடயமில்லை.
இன்னும் சொல்வதானால் ஈழவிடுதலை ஆயுதப் போரை இலங்கையில் ஆரம்பித்து அதேபோரை முள்ளிவாய்க்காலில் முற்றுப்பெற வைத்த நாடுகளில் இந்தியாவின் பெரும் பங்கு உண்டு.
ஆனால் வடக்கு, கிழக்கில் சர்வதேச அழுத்தங்கள் மூலம் ஒரு நிரந்தர தீர்வு வருமானால் அதில் இந்தியாவை வெறுத்தோ ஒதுக்கியோ இந்தியாவுக்கு தெரியாமலோ நிச்சயம் வராது வருவதற்கு இந்தியா 
விடவும் மாட்டாது.
எனவே இந்தியாவின் ஆதரவு தமிழ் தேசிய அரசியலில் தவிர்க்க முடியாத ஒன்று இந்தியாவிற்கு பகைமை நாடாக உள்ள சீனாவுக்கு இலங்கையில் முதலீட்டு வாய்ப்பளிப்பது தமிழ்தேசிய அரசியல் தலைமை எதிர்ப்பதே சரியான அரசியல் ராஜதந்திரம் அதனால்தான் எதிர்த்து வாக்களிக்க வேண்டிய முடிவு எடுக்கப்பட்டது.
சிலவேளை துறைமுகங்கள் அபிவிருத்தி இந்தியாவிற்கு கையளிப்பது தொடர்பாக இலங்கை முடிவுகளை எடுத்திருப்பின் தமிழ் தேசிய கூட்டமைப்பு முடிவுகளில் மாற்றம் ஏற்பட்டிருக்கலாம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>

 


 

ஏப்ரல் 24, 2021

முன்னாள் அமைச்சர் ரிஷாத் எம்.பி.யின் கைது குறித்து மனோ

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன்.24-04-2021. இன்று கைதானமை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தனது முகநூலில் பின்வருமாறு தெரிவித்துள்ளார்.
‘நாடாளுமன்ற உறுப்பினர், கட்சித் தலைவர் நண்பர் ரிஷாத் பதியுதீனை இந்த ரமழான் மாதத்தில் ‘அதிகாலை 3 மணி’ க்கு
 வீடு புகுந்து, தலைமறைவாக வாழும் பாதாள உலகக் கேடியை இழுத்துச் செல்வதைப் போல் கைது செய்ததன் பின்னுள்ள ‘ஆவேசம்’ என்ன? ராஜபக்ஷ அரசின் கொடூர ராணுவ முகம் வெளிப்படுகிறதா?’ 
எனப் பதிவிட்டுள்ளார்.
நிலாவரை.கொம் செய்திகள் >>>